‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
சிரிப்பு நடிகர் மட்டுமின்றி சிந்திக்க வைக்கக்கூடிய நடிகராகவும் இருந்தவர் விவேக். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மீது அதிக பற்று கொண்டவரான விவேக், அவரது மறைவிற்கு பிறகு கிரீன் கலாம் என்ற திடத்தை தொடங்கி ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு பயணித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார்.
மேலும், விவேக் காமெடியனாக நடித்து கடைசியாக தாராள பிரபு என்ற படம் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஆண்டிற்கான சைமா விருது விழாவில் சிறந்த காமெடியனுக்கான விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை அவர் சார்பில் நடிகர் யோகிபாபு பெற்றுக் கொண்டார். அதோடு விவேக்கின் வீட்டிற்கு சென்று அந்த விருதினை அவர் வழங்கியிருக்கிறார்.
இந்ததகவலை விவேக்கின் மகள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தைக்கான விருதினை பெற்றதற்காக தாராளபிரபு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அந்த விருதினை தனது வீடு தேடி வந்து கொடுத்த யோகிபாபுவிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.