ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிரிப்பு நடிகர் மட்டுமின்றி சிந்திக்க வைக்கக்கூடிய நடிகராகவும் இருந்தவர் விவேக். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மீது அதிக பற்று கொண்டவரான விவேக், அவரது மறைவிற்கு பிறகு கிரீன் கலாம் என்ற திடத்தை தொடங்கி ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு பயணித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார்.
மேலும், விவேக் காமெடியனாக நடித்து கடைசியாக தாராள பிரபு என்ற படம் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஆண்டிற்கான சைமா விருது விழாவில் சிறந்த காமெடியனுக்கான விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை அவர் சார்பில் நடிகர் யோகிபாபு பெற்றுக் கொண்டார். அதோடு விவேக்கின் வீட்டிற்கு சென்று அந்த விருதினை அவர் வழங்கியிருக்கிறார்.
இந்ததகவலை விவேக்கின் மகள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தைக்கான விருதினை பெற்றதற்காக தாராளபிரபு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அந்த விருதினை தனது வீடு தேடி வந்து கொடுத்த யோகிபாபுவிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.