வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தா தற்போது அவரை நான்கு மாதமாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்துக்கு காத்திருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜீவனாம்சமாக 50 கோடி ரூபாய் வரை நாகசைதன்யா சமந்தாவுக்கு தரவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: வாழ்க்கை, தொழில் இரண்டையும் ஒன்று கலக்க விட்டதில்லை. இதை நான் ஆரம்பத்தில் இருந்தே பின்பற்றுகிறேன். அவரும் அதையே செய்கிறார். இன்று ஒரு செய்திக்கு பின், அடுத்த செய்தி நொடியில் வந்து விடுகிறது. முந்தையை செய்தியை, புதிய செய்தி நீர்த்து போகச் செய்துவிடுகிறது. மக்கள் மனதில் எந்த செய்தியும் நீடிப்பதில்லை. உண்மையான செய்தி மட்டுமே மக்களிடையே தங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.