விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தா தற்போது அவரை நான்கு மாதமாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்துக்கு காத்திருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜீவனாம்சமாக 50 கோடி ரூபாய் வரை நாகசைதன்யா சமந்தாவுக்கு தரவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: வாழ்க்கை, தொழில் இரண்டையும் ஒன்று கலக்க விட்டதில்லை. இதை நான் ஆரம்பத்தில் இருந்தே பின்பற்றுகிறேன். அவரும் அதையே செய்கிறார். இன்று ஒரு செய்திக்கு பின், அடுத்த செய்தி நொடியில் வந்து விடுகிறது. முந்தையை செய்தியை, புதிய செய்தி நீர்த்து போகச் செய்துவிடுகிறது. மக்கள் மனதில் எந்த செய்தியும் நீடிப்பதில்லை. உண்மையான செய்தி மட்டுமே மக்களிடையே தங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.