ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தலைவி படத்தில் பணியாற்றிய பாலிவுட் எழுத்தாளர் ரஜத் அரோரா என்பவர் ஒரு பேட்டியில், தலைவி-2 உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, முதல் பாகத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு படம் முடிந்துவிட்டது. இரண்டாம் பாகத்தில் அரசியலில் அவர் சந்தித்த வெற்றி தோல்வி, போராட்டங்களை சொல்லப் போகிறோம். அதனால் தலைவி-2 படம் குறித்து கங்கனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் ஓகே சொல்லிவிட்டால் இரண்டாம் பாகத்திற்கான கதைப்பணிகளை தொடங்கி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.