கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டி அசத்திய கன்னட நடிகை | ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர் பட ரீ ரிலீஸில் அதிர்ச்சி : பாதியில் வெளியேறிய ரசிகர்கள் | மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி : விஜய் சேதுபதி | தொடரும் பட இயக்குனரை வீட்டுக்கே வரவழைத்து பாராட்டிய சூர்யா, கார்த்தி | 'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தலைவி படத்தில் பணியாற்றிய பாலிவுட் எழுத்தாளர் ரஜத் அரோரா என்பவர் ஒரு பேட்டியில், தலைவி-2 உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, முதல் பாகத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு படம் முடிந்துவிட்டது. இரண்டாம் பாகத்தில் அரசியலில் அவர் சந்தித்த வெற்றி தோல்வி, போராட்டங்களை சொல்லப் போகிறோம். அதனால் தலைவி-2 படம் குறித்து கங்கனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் ஓகே சொல்லிவிட்டால் இரண்டாம் பாகத்திற்கான கதைப்பணிகளை தொடங்கி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.