பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தலைவி படத்தில் பணியாற்றிய பாலிவுட் எழுத்தாளர் ரஜத் அரோரா என்பவர் ஒரு பேட்டியில், தலைவி-2 உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, முதல் பாகத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு படம் முடிந்துவிட்டது. இரண்டாம் பாகத்தில் அரசியலில் அவர் சந்தித்த வெற்றி தோல்வி, போராட்டங்களை சொல்லப் போகிறோம். அதனால் தலைவி-2 படம் குறித்து கங்கனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் ஓகே சொல்லிவிட்டால் இரண்டாம் பாகத்திற்கான கதைப்பணிகளை தொடங்கி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.