'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சர்வைவர் ஷோவில் கலந்து கொண்ட ஸ்ருஷ்டி டாங்கே தான் எலிமினேட் ஆனதை குறித்து எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வைவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆன காய்த்ரி மற்றும் ஸ்ருஷ்டிக்கு தனியாக போட்டி வைக்கப்பட்டது. இதில் ஸ்ருஷ்டி தோற்றுவிட்ட நிலையில் நிகழ்ச்சியிலிருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 'டிவியில் நீங்கள் பார்ப்பது மிக குறைவு தான். கற்கால மனிதன் போல வாழ்வது எளிதல்ல. சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இப்படி ஒரு ஷோவுக்கு சென்றால் உங்கள் உடல், மனம் மீது அது பாதிப்பை ஏற்படுத்தும். நான் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்றாலும் போட்டியை சரியான இடத்தில் முடித்து இருக்கிறேன். நான் சர்வைவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனதை தோல்வியாக பார்க்கவில்லை. பெரிய வாய்ப்பை தொலைத்துவிட்டேன். இந்த வாய்ப்பு அளித்த ஜீ தமிழ் மற்றும் அர்ஜூன் சார் ஆகியோருக்கு நன்றி' என அதில் அவர் கூறியுள்ளார்.