'பராசக்தி' கதை இதுதான் | தமிழில் சிவராஜ்குமாரின் '45': புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது | ஆஸ்கர் விருதுக்கு 'ஹோம் பவுண்ட்' தேர்வு | பிளாஷ்பேக்: ஒரு பாட்டுக்கு நடித்த முதல்வர் ஸ்டாலின் | பிளாஷ்பேக்: பத்மினி பாடல் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்ஜிஆர் | உருவாகிறது 'ஹாட் ஸ்பாட் 2' : பிரியாபவானி சங்கர் நடிக்கிறார் | விஜயகாந்த் மகனை வாழ்த்த மனம் இல்லையா? கவுரவம், ஈகோ தடுக்கிறதா? | ஓடிடி தளங்களுக்குத் தணிக்கை இல்லையா? | பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா ? போலி டாக்டரின் பதிவு குறித்து ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | 'விருஷபா' படத்தை ஒப்புக்கொள்ள இந்த சிறப்பம்சம் தான் காரணம் ; மோகன்லால் |

சர்வைவர் ஷோவில் கலந்து கொண்ட ஸ்ருஷ்டி டாங்கே தான் எலிமினேட் ஆனதை குறித்து எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வைவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆன காய்த்ரி மற்றும் ஸ்ருஷ்டிக்கு தனியாக போட்டி வைக்கப்பட்டது. இதில் ஸ்ருஷ்டி தோற்றுவிட்ட நிலையில் நிகழ்ச்சியிலிருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 'டிவியில் நீங்கள் பார்ப்பது மிக குறைவு தான். கற்கால மனிதன் போல வாழ்வது எளிதல்ல. சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இப்படி ஒரு ஷோவுக்கு சென்றால் உங்கள் உடல், மனம் மீது அது பாதிப்பை ஏற்படுத்தும். நான் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்றாலும் போட்டியை சரியான இடத்தில் முடித்து இருக்கிறேன். நான் சர்வைவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனதை தோல்வியாக பார்க்கவில்லை. பெரிய வாய்ப்பை தொலைத்துவிட்டேன். இந்த வாய்ப்பு அளித்த ஜீ தமிழ் மற்றும் அர்ஜூன் சார் ஆகியோருக்கு நன்றி' என அதில் அவர் கூறியுள்ளார்.