லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தற்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை படப்பிடிப்பே இன்னும் முடிவடையவில்லை. அதனால் அவர் அந்த படத்தை முடித்து விட்டு வருவதற்குள் சிவா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா.
தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்த மாதத்திலேயே சூர்யா - சிவா கூட்டணி களத்தில் இறங்கி விடுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அந்த படத்திற்காக தற்போது செட் போடும் பணிகளும் நடைபெற்று வருவதால் அந்த செய்தி இன்னும் உறுதியாகி இருக்கிறது.
மேலும், அண்ணாத்த படத்திற்கு முன்பே சூர்யா நடிக்கும் படத்தை தான் இயக்கயிருந்தார் சிறுத்தை சிவா. திடீரென்று ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததால் சூர்யாவிடம் விசயத்தை சொன்னபோது அவரும் ரஜினி படத்தை இயக்கிவிட்டு வருமாறு அனுமதி கொடுத்ததோடு, அந்த படம் முடிந்ததும் நாம் இணைவோம் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது அண்ணாத்த பட வேலைகள் முடிந்து விட்டதால் சூர்யாவுடன் கூட்டணி அமைக்கிறார் சிறுத்தை சிவா.