கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ரமணா ரீமேக்கை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் என்ற பெயரில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதன்பிறகு மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை இயக்கினார். அல்லு அர்ஜூனை வைத்து முருகதாஸ் ஒரு படம் இயக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டார் அல்லு அர்ஜூன். அப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
அப்படத்தை முடித்த பிறகு மூன்று இயக்குனர்களுக்கு அல்லு அர்ஜூன் கால்சீட் கொடுத்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் கொரட்டல்ல சிவா, பிரசாந்த் நீல் போன்ற இயக்குனர்களுடன் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரும் இடம் பெற்றுள்ளது. விஜய்யின் 65ஆவது படத்தை இயக்க இருந்து பின்னர் வெளியேறிய முருகதாஸ், அந்த கதையைத்தான் அல்லு அர்ஜூனிடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.