நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் |

ரமணா ரீமேக்கை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் என்ற பெயரில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதன்பிறகு மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை இயக்கினார். அல்லு அர்ஜூனை வைத்து முருகதாஸ் ஒரு படம் இயக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டார் அல்லு அர்ஜூன். அப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
அப்படத்தை முடித்த பிறகு மூன்று இயக்குனர்களுக்கு அல்லு அர்ஜூன் கால்சீட் கொடுத்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் கொரட்டல்ல சிவா, பிரசாந்த் நீல் போன்ற இயக்குனர்களுடன் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரும் இடம் பெற்றுள்ளது. விஜய்யின் 65ஆவது படத்தை இயக்க இருந்து பின்னர் வெளியேறிய முருகதாஸ், அந்த கதையைத்தான் அல்லு அர்ஜூனிடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.