என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ரமணா ரீமேக்கை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் என்ற பெயரில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதன்பிறகு மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை இயக்கினார். அல்லு அர்ஜூனை வைத்து முருகதாஸ் ஒரு படம் இயக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டார் அல்லு அர்ஜூன். அப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
அப்படத்தை முடித்த பிறகு மூன்று இயக்குனர்களுக்கு அல்லு அர்ஜூன் கால்சீட் கொடுத்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் கொரட்டல்ல சிவா, பிரசாந்த் நீல் போன்ற இயக்குனர்களுடன் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரும் இடம் பெற்றுள்ளது. விஜய்யின் 65ஆவது படத்தை இயக்க இருந்து பின்னர் வெளியேறிய முருகதாஸ், அந்த கதையைத்தான் அல்லு அர்ஜூனிடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.