ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

ரமணா ரீமேக்கை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் என்ற பெயரில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதன்பிறகு மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை இயக்கினார். அல்லு அர்ஜூனை வைத்து முருகதாஸ் ஒரு படம் இயக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டார் அல்லு அர்ஜூன். அப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
அப்படத்தை முடித்த பிறகு மூன்று இயக்குனர்களுக்கு அல்லு அர்ஜூன் கால்சீட் கொடுத்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் கொரட்டல்ல சிவா, பிரசாந்த் நீல் போன்ற இயக்குனர்களுடன் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரும் இடம் பெற்றுள்ளது. விஜய்யின் 65ஆவது படத்தை இயக்க இருந்து பின்னர் வெளியேறிய முருகதாஸ், அந்த கதையைத்தான் அல்லு அர்ஜூனிடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.