ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் எந்த சங்கப் பொறுப்பிலும் இல்லாமல் போனதால் விஷால் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'எனிமி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
தற்போது அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஆரம்பமானது. ஐதராபாத்தில் தொடர்ச்சியாக படப்பிடிப்புகளை நடத்தினார்கள். இப்போது படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாவதாக விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் தன்னுடைய 32வது படத்திலும் தொடர்ந்து நடிக்க உள்ளார் விஷால். இப்படத்தின் பூஜை விஷால் பிறந்தநாளான கடந்த மாதம் ஆகஸ்ட் 29ம் தேதியன்று நடைபெற்றது.
ஒரு படத்தை முடிக்கும் தருவாயில் அடுத்து ஒரு புதிய படத்தை ஆரம்பிக்கும் முறையை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். 'எனிமி, வீரமே வாகை சூடும், விஷால் 32' என அடுத்தடுத்து விஷால் படங்கள் வெளியாக உள்ளன.