டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
தமிழ் சினிமாவில் எந்த சங்கப் பொறுப்பிலும் இல்லாமல் போனதால் விஷால் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'எனிமி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
தற்போது அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஆரம்பமானது. ஐதராபாத்தில் தொடர்ச்சியாக படப்பிடிப்புகளை நடத்தினார்கள். இப்போது படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாவதாக விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் தன்னுடைய 32வது படத்திலும் தொடர்ந்து நடிக்க உள்ளார் விஷால். இப்படத்தின் பூஜை விஷால் பிறந்தநாளான கடந்த மாதம் ஆகஸ்ட் 29ம் தேதியன்று நடைபெற்றது.
ஒரு படத்தை முடிக்கும் தருவாயில் அடுத்து ஒரு புதிய படத்தை ஆரம்பிக்கும் முறையை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். 'எனிமி, வீரமே வாகை சூடும், விஷால் 32' என அடுத்தடுத்து விஷால் படங்கள் வெளியாக உள்ளன.