மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் |
சூர்யா- ஜோதிகா ஆகிய இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது. காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் உள்பட 7 படங்களில் நடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2006 செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சூர்யா-ஜோதிகாவின் 15வது திருமண நாள் ஆகும்.
இந்த நிலையில் சூர்யாவின் புகைப்படத்துடன் ஆண் சிங்கம் ஒன்று பெண் சிங்கத்தை கட்டியணைத்தபடி இருப்பது போன்று தான் வரைந்த ஒரு புகைப்படத்தை சூர்யாவுக்கு திருமண நாள் பரிசாக வழங்கியுள்ள ஜோதிகா, இதை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சூர்யா குறித்த சில நெகிழ்ச்சி பதிவும் போட்டுள்ளார்.
அதில், சரியான நபரை சந்திப்பது அவரவர் விதி. அவருக்கு மனைவியாக வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு. ஆனால் ஒவ்வொரு நாளும் அவரிடம் காதலில் விழுவது என்னை மீறி நடக்கும் செயல். எப்போதும் அவர் அவராகவே இருப்பதினால்தான் இது சாத்தியமாகிறது. எங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாக, எனக்கு சிறந்த கணவராக, சில நேரங்களில் எனது அப்பா அம்மாவாகவும் இருக்கும் எனது வாழ்நாள் நண்பனுக்கு எனது சிங்கத்துக்கு திருமண நாளில் ஒரு குட்டிப்பரிசு, என்று பதிவிட்டுள்ளார் ஜோதிகா.