இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் நேற்றைய தினம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகி இருப்பதை அடுத்து ஹாலிவுட் படங்களான சாங் சி மற்றும் எப்-9 ஆகிய படங்களும் இந்தியா முழுக்க திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. அதோடு இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்த செய்தி கங்கனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வழியான பெல்பாட்டம் திரைப்படம் 4 நாட்களில் 2.75 கோடிகளை வசூலித்தபோது, ஹாலிவுட் படமான சாங் சி முதல் மூன்று தினங்களில் 12.63 கோடிகளை வசூலித்தது. இப்படி அக்ஷய்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கே இந்த நிலை என்றால் தனது தலைவி படத்தின் வசூல் இந்த ஹாலிவுட் படங்களை பாதிக்கப்படுமோ என்ற அதிர்ச்சி காரணமாகவே ஹாலிவுட் படங்களால் இந்திய படங்களின் வசூல் பாதிக்கிறது. அதனால் ஹாலிவுட் படங்களின் இந்திய ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்று ஒரு அதிரடி கருத்து வெளியிட்டுள்ளார் கங்கனா.