எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2005ல் சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கிய ஐயா படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகையான நயன்தாரா. அந்த வகையில் கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர் கதாநாயகியகாகவே வலம் வருகிறார். அதோடு, கடந்த காலங்களில் சிம்பு, பிரபு தேவாவை அடுத்தடுத்து காதலித்த நயன்தாரா, பிரபு தேவாவை திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் திருமணம் தடைபட்டது.
இந்தநிலையில் தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாரா, அவரை எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது சஸ்பென்சாக உள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட நயன்தாரா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு குடும்ப வாழ்க்கையில் பயணிக்க விரும்பும் நயன்தாரா பின்னாளில் படங்களை தயாரிப்பது, டைரக்சன் செய்வது என்று தனது கவனத்தை திருப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார். இந்த மொழி படங்களை முடித்ததும் திருமணம் செய்து கொள்வார் என தெரிகிறது.