பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உள்பட அனைத்து முன்வரிசை ஹீரோக்களுடனும் காமெடியனாக நடித்து விட்டவர் சூரி. தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இதனால் அடுத்து சந்தானம் பாணியில் சூரியும் முழுநேர ஹீரோவாகி விடுவாரோ என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது 44ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அன்றைய தினம் அனைவருமே சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, அவரோ தனது தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார். அதையடுத்து அண்ணனும், தம்பியும் ஒரேநாளில் பிறந்தார்களா? என்ற ஆச்சர்ய கேள்விகள் எழுந்தபோது, நானும் எனது தம்பி லட்சுமணனும் இரட்டை பிறவிகள் என்பதை சோசியல் மீடியாவில் தெரிவித்தார் சூரி.
அதையடுத்து டுவிட்டரில், சூரியை வாழ்த்திய சிவகார்த்திகேயன், அண்ணன் ஹீரோவாகி விட்டார். இனிமேல் நம்ம சங்கத்துக்கு வேற ஆளதான் பார்க்கனும் போல என்று கிண்டலாக ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சூரி, அப்படியெல்லாம் விட்ற முடியாதுங்க தலைவரே, சர்க்கஸ்னா சிங்கம் இருக்கனும். சங்கம்னா செயலாளர் இருக்கனும். ரொம்ப நன்றிங்க தம்பி, லவ் யூ தம்பி என்று சிவகார்த்திகேயனுக்கு பதில் கொடுத்துள்ளார் சூரி.