தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பிரமாண்டமாக தான் இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் மிக சரியான ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்து அவற்றை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றினார் இயக்குனர் ராஜமவுலி. அதேசமயம் தற்போது ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து தான் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி அமையாமல் திணறி வருகிறார் ராஜமவுலி.
கொரோனாவின் இரண்டு அலைகள் காரணமாக மற்ற முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால், இப்போது முன்கூட்டியே முக்கியமான பண்டிகை தேதிகளை புக் செய்து வைத்து விட்டனர். பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் கூட 2022 சங்கராந்தி பண்டிகை ரிலீஸ் என அறிவித்தாகிவிட்டது.
இந்தநிலையில் ராஜமவுலியும் அதே சங்கராந்தி பண்டிகையன்று ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிடலாம் என விரும்புகிறாராம். இதுகுறித்து பிரபாஸிடம் அவர் பேசியதாகவும் ராதே ஷ்யாம் பட வெளியீட்டை மாற்றி வைக்கும்படி அவரிடம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு ராதே ஷ்யாம் பட தயாரிப்பாளரை பொறுத்தவரை நீண்ட நாட்கள் அந்தப்படம் தயாரிப்பில் இருந்ததால் அந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என பிரபாஸ் கைவிரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.




