'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
பிரமாண்டமாக தான் இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் மிக சரியான ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்து அவற்றை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றினார் இயக்குனர் ராஜமவுலி. அதேசமயம் தற்போது ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து தான் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி அமையாமல் திணறி வருகிறார் ராஜமவுலி.
கொரோனாவின் இரண்டு அலைகள் காரணமாக மற்ற முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால், இப்போது முன்கூட்டியே முக்கியமான பண்டிகை தேதிகளை புக் செய்து வைத்து விட்டனர். பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் கூட 2022 சங்கராந்தி பண்டிகை ரிலீஸ் என அறிவித்தாகிவிட்டது.
இந்தநிலையில் ராஜமவுலியும் அதே சங்கராந்தி பண்டிகையன்று ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிடலாம் என விரும்புகிறாராம். இதுகுறித்து பிரபாஸிடம் அவர் பேசியதாகவும் ராதே ஷ்யாம் பட வெளியீட்டை மாற்றி வைக்கும்படி அவரிடம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு ராதே ஷ்யாம் பட தயாரிப்பாளரை பொறுத்தவரை நீண்ட நாட்கள் அந்தப்படம் தயாரிப்பில் இருந்ததால் அந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என பிரபாஸ் கைவிரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.