'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம்பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, நதியா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக லிங்குசாமி வில்லன் நடிகர் தேடி வந்தபோது மாதவனிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியொரு விசயமே நடக்கவில்லை என்று மாதவனே மறுத்தார். பின்னர் தனது புதிய படத்தில் ஆதி வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியிட்டார் லிங்குசாமி.
இந்நிலையில் தற்போது லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தை சிரஞ்சீவியை வைத்து இயக்கி வரும் மோகன் ராஜாவும் அந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் பிஜூமேனனை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது ஒரு மெகா நடிகர் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று மாதவனை காட்பாதரில் வில்லனாக நடிக்க வைக்க மோகன் ராஜா அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது சீக்கிரமே தெரிந்து விடும்.