மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா | மறுவெளியீட்டுக்காக 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட 'ஆட்டோகிராப்' | தமிழ் சினிமாவில் தெலுங்கு ஆதிக்கம் | நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில் | இல்லறத்தில் 25வது ஆண்டு, சினிமாவில் 30வது ஆண்டு | விஷால், தன்ஷிகா இணைய காரணமான டி.ராஜேந்தர் |
சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம்பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, நதியா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக லிங்குசாமி வில்லன் நடிகர் தேடி வந்தபோது மாதவனிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியொரு விசயமே நடக்கவில்லை என்று மாதவனே மறுத்தார். பின்னர் தனது புதிய படத்தில் ஆதி வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியிட்டார் லிங்குசாமி.
இந்நிலையில் தற்போது லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தை சிரஞ்சீவியை வைத்து இயக்கி வரும் மோகன் ராஜாவும் அந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் பிஜூமேனனை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது ஒரு மெகா நடிகர் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று மாதவனை காட்பாதரில் வில்லனாக நடிக்க வைக்க மோகன் ராஜா அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது சீக்கிரமே தெரிந்து விடும்.