பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களுக்குமான இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே, படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அவருடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாக நேற்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு வந்தியத் தேவன் ஆக நடிக்கும் கார்த்தி, “இளவரசே, நீங்கள் அதற்குள் விடைபெற்றுக் கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். - வந்தியத்தேவன்,” என பதிலளித்துள்ளார்.
இதுநாள் வரையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் யார், யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள் என்பது ஒரு யூகமாகத்தான் வெளிவந்து கொண்டிருந்தது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் இளவரசன் அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவியும், வந்தியத்தேவன் ஆக கார்த்தியும் நடிக்கிறார்கள் என்பது, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரது டுவிட்டர் பதிவின் மூலம் 'சோழ ரகசியம்' வெளிவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே கார்த்தி இப்படி பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் அனுமதி இல்லாமல் அவர் இப்படி செய்திருக்கவும் வாய்ப்பில்லை.
கார்த்தி டுவிட்டரின்படி இன்னும் ஆறு நாட்களில் மத்தியப் பிரதேச படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறதா அல்லது மீண்டும் சென்னையிலோ, ஐதராபாத்திலோ படப்பிடிப்பு நடைபெறுமா என்பது விரைவில் தெரிய வரும்.