'பரிசு' திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு! | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் |
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களுக்குமான இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே, படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அவருடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாக நேற்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு வந்தியத் தேவன் ஆக நடிக்கும் கார்த்தி, “இளவரசே, நீங்கள் அதற்குள் விடைபெற்றுக் கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். - வந்தியத்தேவன்,” என பதிலளித்துள்ளார்.
இதுநாள் வரையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் யார், யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள் என்பது ஒரு யூகமாகத்தான் வெளிவந்து கொண்டிருந்தது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் இளவரசன் அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவியும், வந்தியத்தேவன் ஆக கார்த்தியும் நடிக்கிறார்கள் என்பது, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரது டுவிட்டர் பதிவின் மூலம் 'சோழ ரகசியம்' வெளிவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே கார்த்தி இப்படி பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் அனுமதி இல்லாமல் அவர் இப்படி செய்திருக்கவும் வாய்ப்பில்லை.
கார்த்தி டுவிட்டரின்படி இன்னும் ஆறு நாட்களில் மத்தியப் பிரதேச படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறதா அல்லது மீண்டும் சென்னையிலோ, ஐதராபாத்திலோ படப்பிடிப்பு நடைபெறுமா என்பது விரைவில் தெரிய வரும்.