ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னட சினிமாவின் பிரபல நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி. இவர்கள் போதை பொருள் பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ராகினி, சஞ்சனா இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகி உள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இருவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படலாம் என தெரிகிறது.