நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோர் அண்ணன், தங்கையாக நடித்த பாசமலர் படம்தான் இன்றைக்கும் அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக சொல்லப்படும் படம். தற்போது சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிக்கும் உடன்பிறப்பே படம் நவீன பாசமலர் என்கிறார் இயக்குனர் சரவணன். பத்திரிகையாளரான இவர் ஏற்வெனவே தஞ்சை விவசாய பிரச்சினையை மையமாக கொண்டு கத்துக்குட்டி என்ற படத்தை இயக்கியவர்.
உடன்பிறப்பே பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: கத்துக்குட்டி படத்துக்கு பிறகு அடுத்த படம் கிடைக்கவில்லை. இந்த படத்தின் கதையோடு சில காலம் அலைந்தேன். கடைசியில் சூர்யா வீட்டு கதவு திறந்தது. சூர்யா சார் டீமில் அனைவருமே கதையை கேட்டுவிட்டு இது நவீன பாசமலர் என்றார்கள். நான் பத்திரிகையாளராக இருக்கும்போது ஜோதிகா எனக்கு அறிமுகம் என்பதால் அவரும் என்னை நம்பி படத்துக்குள் வந்தார். அவரின் 50வது படமாக இதில் நடிக்க முடிவெடுத்தார்.
முழுக்க முழுக்க தஞ்சாவூர் பெண்ணாக அவர் மாறி நடித்தார். பாசமும், கம்பீரமும் மிக்க பெண்ணாக படம் முழுக்க வலம் வருவார். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத தூய மனிதராக சசிகுமார் நடித்திருக்கிறார். இவர் மாதிரி வாழணும் என்று நினைக்க வைக்கிற மாதிரியான கேரக்டர் அவருடையது. வேல்ராஜின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்தை நல்லபடியாக உருவாக்க உதவியது.