அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்குகிறார். இதில் பரத், வாணி போஜன் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார், ராஜ்குமார், காவ்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தென்காசியில் தொடங்கி உள்ளது. முழு படப்பிடிப்பும் தென்காசியை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு கூறியதாவது: இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது எனது 12வது தயாரிப்பு. இது ஸ்லாஷர்-த்ரில்லர் வகையில் முழுக்க முழுக்க தென்காசியில் எடுக்கப்படவுள்ளது.
இயக்குநர் எம்.சக்திவேல் எனக்கு ஸ்கிரிப்ட்டை விவரித்தபோது, படத்தின் பல இடங்கள் ஆச்சர்ய திருப்பங்கள் தருவதாக இருந்தது. இக்கதையை கேட்ட பிறகு பரத் மற்றும் வாணி போஜன் இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்துவார்கள் என்று தோன்றியது. திரைக்கதை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக இருவரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டனர்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களும் அவரது கதாப்பாத்திரம் மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது என்பதை உணர்ந்து உடனடியாக ஒப்புக்கொண்டார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து திட்டமிட்டபடி திரையரங்கில் வெளியிடவுள்ளோம். என்றார்.