பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் இன்று(ஆக., 23) முதல் திறக்கப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன்புதான் இந்த அறிவிப்பு என்பதால் உடனடியாகத் திறக்கப்பட உள்ள தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் தான் அதிக தியேட்டர்கள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.
இன்று திறக்கப்படும் தியேட்டர்களிலும் படங்களைத் திரையிட புதிய படங்கள் எதுவும் இல்லை. எனவே, இதற்கு முன்பு வெளியான சில தமிழ்ப் படங்களையும், வேற்று மொழிப் படங்களையும்தான் இன்று திரையிட உள்ளார்கள்.
ஹிந்திப் படமான 'பெல்பாட்டம்', ஹாலிவுட் படமான 'கோட்சில்லா Vs கிங்காங்', தமிழ்ப் படமான 'பாரிஸ் ஜெயராஜ்', உள்ளிட்ட படங்களுக்கு சென்னையில் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது. மற்ற மாநகரங்கள், நகரங்களுக்கான முன்பதிவுகளை ஆன்லைன் முன்பதிவுகள் திறக்கப்படவில்லை.
கொரானோ முதல் அலைக்குப் பின் கடந்த வருடம் நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது, அடுத்த சில நாட்களிலேயே ஐந்து படங்கள் வெளிவந்தன. அதன்பின் டிசம்பர் மாதம் வரையிலும் சின்னச் சின்ன படங்கள்தான் அதிகமாக வந்தன. இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகுதான் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகமாக வந்தனர்.
அது போல இந்த வாரம் வெள்ளிக்கிழமை சில புதிய படங்கள் வெளிவந்தால் மட்டுமே மக்கள் ஓரளவிற்காக தியேட்டர்களுக்கு வருவார்கள். 'அண்ணாத்த, வலிமை' போன்ற பெரிய படங்கள் வந்தால்தான் மக்களை தியேட்டர்களுக்கு அதிகம் வரவழைக்க முடியும் என தியேட்டர்காரர்களே தெரிவிக்கிறார்கள்.