'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கொரோனா முதல் அலை தொடங்கியதில் இருந்தே சினிமா தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. கொரோனா முதல் அலை குறைவடைந்தபோது 50 சதவிகிதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோதும் அதையடுத்து கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதன்காரணமாக முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் மா.சுப்ரமணியத்தை சந்தித்து தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதோடு கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைபிடிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வாரத்தில் மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி அதையடுத்து தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர். மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.