'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி ஆச்சரியப்படுத்தியவர் இயக்குனர் பா.ரஞ்சித். சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே ரஜினி படத்தை இயக்கி விட்டதால் அடுத்ததாக அஜித், விஜய் ஆகியோரின் படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்கிற படத்தை இயக்கி, அந்தப் படத்தை எல்லோரும் பேசும்படியான வெற்றி படமாக்கினார். இதையடுத்து மீண்டும் ரஜினி படத்தை பா.ரஞ்சித் இயக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேச சென்னையில் உள்ள பிரபல ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றிற்கு வந்திருந்தார் ரஜினிகாந்த். அந்த சமயத்தில் பா.ரஞ்சித் அவரை சந்தித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இதையடுத்து மீண்டும் ரஜினி படத்தை பா.ரஞ்சித் இயக்குவதற்கான அறிகுறியோ என்று ரசிகர்கள் பேசத்தொடங்கி உள்ளனர்.
ஆனால் தற்போது இது குறித்த இன்னொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினிகாந்த் டப்பிங் பேசிய ஒளிப்பதிவு கூடத்தின் கீழ்தளத்தில் தான் விஐபிகளுக்காக பிரத்தியோகமாக படங்களை திரையிட்டு காட்டும் ப்ரிவியூ தியேட்டர் அமைந்துள்ளது. அங்கே சில விஐபிகளுக்காக தனது சார்பட்டா பரம்பரை படத்தை திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்திருந்த ரஞ்சித். அதுதொடர்பாக அங்கே வந்திருந்தார், அப்போது ரஜினிகாந்த் அங்கே அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேசுகிறார் என்பதை அறிந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தனது சார்பட்டா பரம்பரை படத்தை ரஜினிக்கு போட்டுக் காட்டுவதற்காக நேரம் ஒதுக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.




