Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறு கவனகுறைவு வாழ்க்கையை மாற்றி விட்டது: விபத்து பற்றி யாஷிகா விளக்கம்

05 ஆக, 2021 - 19:26 IST
எழுத்தின் அளவு:
Yashika-says-how-accident-met

தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தவர் யாஷிகா ஆனந்த். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்சில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பியபோது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது தோழி பவனி உயிரிழந்தார்.

தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள யாஷிகா விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பேசி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: விபத்து நடந்த அன்று இரவு நாங்கள் 4 பேர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு உணவு சாப்பிடச் சென்றோம். அங்கிருந்து 11 மணியளவில் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.

அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. காரை ஓட்டியது நான் தான். ஆனால், நிச்சயமாக நான் வேகமாக ஓட்டவில்லை. சாலை மிகவும் இருட்டாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை கவனிக்காமல் அதன் மீது மோதிவிட்டேன். மோதிய வேகத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து மூன்று முறை உருண்டது.

எனக்கு பக்கத்து சீட்டில் பவனி அமர்ந்திருந்தார். அவர் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. காற்று வாங்குவதற்காக ஜன்னல் கண்ணாடியையும் திறந்து வைத்திருந்தார். எனவே கார் விபத்துக்குள்ளானபோது அவர் ஜன்னலுக்கு வெளியே சென்று விழுந்தார். அவரது தலையில் பலமாக அடிபட்டது. மற்ற மூவரும் காருக்கு உள்ளேயே தான் இருந்தோம்.

காரின் கதவுகள் லாக் ஆகி விட்டதால் எங்களால் வெளியேற முடியவில்லை. பின்னர் சன் ரூப் கண்ணாடியைத் திறந்து வெளியேறினோம். சில நிமிடங்களிலேயே அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. என்னால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. என் உடல் ழுழுவதும் செயலிழந்து விட்டதைப் போல உணர்ந்தேன். நாங்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். நான் குணமடைந்த பின்னரே பவனி இறந்த செய்தி என்னிடம் சொல்லப்பட்டது.

நான் அன்று குடிக்கவில்லை. எந்தவிதப் போதைப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. அது ஒரு சிறு கவனச் சிதறலால் ஏற்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து. அது எங்கள் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு மிகப்பெரிய குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொண்டிருக்கிறது. அதோடுதான் நான் இனி என்றென்றும் வாழ வேண்டும்.

நான் உயிர் பிழைத்திருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். பவானியும், பவானியின் பெற்றோர்களும் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
வாழு, வாழ விடு : நிபந்தனையற்ற அன்பு எப்போதும் - அஜித்வாழு, வாழ விடு : நிபந்தனையற்ற அன்பு ... வெப் சீரிஸாக மாறும் சார்பட்டா பரம்பரை 2ம் பாகம் வெப் சீரிஸாக மாறும் சார்பட்டா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Suman - Trichy,இந்தியா
10 ஆக, 2021 - 19:34 Report Abuse
Suman மீண்டும் ஒருமுறை கண்ணம்பா காலத்து வசனம் போல் இந்த செய்தியை படித்து பார்க்கவும்.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
08 ஆக, 2021 - 20:36 Report Abuse
சாண்டில்யன் பாடம் கற்றுக் கொள்வோம் விபத்துகளை தவிர்ப்போம்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
08 ஆக, 2021 - 19:55 Report Abuse
Sathish நண்பி பலியானதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் போதுமா? இப்படியொரு சட்டம் நம் நாட்டில் உள்ளதென்றால் எங்களுக்கும் சொல்லுங்க.
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
06 ஆக, 2021 - 12:44 Report Abuse
Swaminathan Chandramouli சிறு கவன குறைவு அம்மா யாஷிகா இருநூற்று இருபது கிலோ மீட்டர் வேகம் சிறு கவன குறைவால் ஆக்க்சிலேட்டரை அழுத்தியதால் தான் இந்த வேகத்தால் உங்கள் சிநேகிதி வெளியே பறந்து காற்றோடு கலந்து விட்டார் மீதம் உள்ள உங்கள்இரண்டு காதலர்கள் கதி என்ன? கார் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது ஆனால் யார் செய்த பாவமோ நீங்கள் தப்பித்து விட்டீர்கள் இந்த அபாயகரமான விபத்து உங்கள் சிரியகவனக்குறைவால் நடந்தது என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை
Rate this:
Srinivasan - Bangalore,இந்தியா
06 ஆக, 2021 - 12:34 Report Abuse
Srinivasan நீங்க தண்ணி அடிச்சிட்டு, மிக வேகமா ஓட்டுனதான் எல்லாரும் நினைப்பாங்க. உங்க சரித்திரம் அப்படி. நீங்க பொய் சொல்லுறீங்கன்னு தான் தோணுது.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in