சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
சொகுசு கார் இறக்குமதிக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுப்பிரமணியன் வழக்கிற்கான தீர்ப்பை வழங்கினார்.
நடிகர் என்று வழக்கில் குறிப்பிடவில்லை, சாமானிய மனிதர்கள் வரி கட்டும் போது நிங்கள் ஏன் வரி கட்ட மறுக்கிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அது குறித்த செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்ததும் டுவிட்டரில் தனுஷிற்கு எதிராக 'வரிகட்டுங்க தனுஷ்' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் வந்தது. சிம்பு ரசிகர்கள்தான் அந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பதிவிட்டு வருகிறார்கள்.
பொதுவாக டுவிட்டர் தளத்தில் விஜய், அஜித் ரசிகர்கள்தான் அதிகம் மோதிக் கொள்வார்கள். இது போன்று சொகுசு கார் இறக்குமதி வரி விவகாரத்தில் விஜய்க்கு கடந்த மாதம் நீதிபதி கண்டனம் தெரிவித்த அன்று கூட 'வரி கட்டுங்க விஜய்' என்பது டிரெண்டானது. அது போலவே இன்று 'வரி கட்டுங்க தனுஷ்' என்பதை டிரெண்டிங் செய்துள்ளார்கள்.
சிம்பு நடிக்கும் அடுத்த படத்திற்கு சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று தனுஷின் 44வது படம் பற்றிய அறிவிப்பு வந்ததும் தனுஷ் மீதான சிம்பு ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.