மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாள சினிமாவை பொருத்தவரை நடிகர் திலீப் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், விதவிதமான கெட்டப்புகளையும் விரும்பி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது நண்பர் நாதிர்ஷா டைரக்ஷனில் கேசு இ வீட்டின்டே நாதன் என்கிற படத்தில் நடித்துள்ளார் திலிப். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவ்வப்போது இடைவெளி விட்டு நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தில் அரசுவேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதான கிழவராக நடித்திருக்கிறார் திலீப். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஊர்வசி.
சமீபத்தில் கூட தலையில் பாதிக்கு மேல் முடி இல்லாமல், துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு தொப்பை வயிற்றுடன், சோப்பு போட்டு குளிப்பது போன்று திலீப் காட்சி அளிக்கும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. நடிகர் திலீப் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறை சென்று தற்போது ஜாமினில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வரும் வாய்ப்பை பயன்படுத்தி கிடைத்தவரை லாபம் என கமர்சியல் படங்களில் நடித்து காசு பார்த்துவிட்டு போகாமல், தனது ஆத்ம திருப்திக்காக விதவிதமான கதாபாத்திரங்களை தேடி அவர் நடிப்பது, அவர் மீதான பிரமிப்பை அதிகரிக்கிறது.