'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
மலையாள சினிமாவை பொருத்தவரை நடிகர் திலீப் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், விதவிதமான கெட்டப்புகளையும் விரும்பி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது நண்பர் நாதிர்ஷா டைரக்ஷனில் கேசு இ வீட்டின்டே நாதன் என்கிற படத்தில் நடித்துள்ளார் திலிப். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவ்வப்போது இடைவெளி விட்டு நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தில் அரசுவேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதான கிழவராக நடித்திருக்கிறார் திலீப். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஊர்வசி.
சமீபத்தில் கூட தலையில் பாதிக்கு மேல் முடி இல்லாமல், துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு தொப்பை வயிற்றுடன், சோப்பு போட்டு குளிப்பது போன்று திலீப் காட்சி அளிக்கும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. நடிகர் திலீப் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறை சென்று தற்போது ஜாமினில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வரும் வாய்ப்பை பயன்படுத்தி கிடைத்தவரை லாபம் என கமர்சியல் படங்களில் நடித்து காசு பார்த்துவிட்டு போகாமல், தனது ஆத்ம திருப்திக்காக விதவிதமான கதாபாத்திரங்களை தேடி அவர் நடிப்பது, அவர் மீதான பிரமிப்பை அதிகரிக்கிறது.