600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் நீடித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது கல்வி உதவியாகவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிச்சா சுதீப் கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊரான சிவமோகா பகுதியில் உள்ள 133 வருடங்கள் பழமைவாய்ந்த அரசு பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
இந்த பள்ளியின் கட்டடங்களை புதுப்பித்துக் கொடுப்பதுடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அவர் செய்து கொடுக்க இருக்கிறாராம். அவரது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் இவ்வாறு செய்வது முதன் முறை அல்ல.. ஏற்கனவே கடந்த வருடம் சித்ரதுர்கா பகுதியிலுள்ள நான்கு பள்ளிகளை தத்தெடுத்து இதுபோல உதவி செய்துள்ளார் கிச்சா சுதீப்.