மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பெரும்பாலான நடிகைகள் ரியஸ் எஸ்டேட், தங்க நகைகளில் முதலீடு செய்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் சிலவற்றில் முதலீடு செய்திருந்தாலும் தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அதோடு அவர் சாய்வாலே என்ற டீ நிறுவனத்தில் ஒரு பங்குதாரராகி முதலீடு செய்திருக்கிறார்.
வட இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் விரைவில் சென்னை, பெங்களூர் உள்பட தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் தங்களது 35 கிளைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்காரணமாக ரூ. 5 கோடியை முதலீட்டாளர்களிடம் எதிர்பார்க்கும் இந்த சாய்வாலே டீ நிறுவனம் மேலும் சில நிறுவனங்களையும் தங்களது பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டு வருகிறது. இதில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவனும் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளனர்.




