அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி |
பெரும்பாலான நடிகைகள் ரியஸ் எஸ்டேட், தங்க நகைகளில் முதலீடு செய்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் சிலவற்றில் முதலீடு செய்திருந்தாலும் தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அதோடு அவர் சாய்வாலே என்ற டீ நிறுவனத்தில் ஒரு பங்குதாரராகி முதலீடு செய்திருக்கிறார்.
வட இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் விரைவில் சென்னை, பெங்களூர் உள்பட தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் தங்களது 35 கிளைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்காரணமாக ரூ. 5 கோடியை முதலீட்டாளர்களிடம் எதிர்பார்க்கும் இந்த சாய்வாலே டீ நிறுவனம் மேலும் சில நிறுவனங்களையும் தங்களது பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டு வருகிறது. இதில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவனும் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளனர்.