ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் எங்கேயோ இருக்க வேண்டியவர் என்ற வரிகளுக்கு பொருத்தமான சொந்தக்காரர் சிலம்பரசன். சிறு வயதிலிருந்தே அவருக்கிருக்கும் திறமைகளை வைத்து அவர் எங்கேயோ உச்சத்தில் இருக்க வேண்டியவர் என்று திரையுலகில் பலரும் சொல்வார்கள்.
அடுத்தடுத்த காதல் தோல்வி, படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டார் என்ற தகவல்கள் அவருடைய சினிமா வாழ்க்கையில் தடைக்கற்களாக அமைந்தன. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு அவர் மீதான விமர்சனங்களை தகர்த்தெறிந்தது.
அடுத்து 'ஈஸ்வரன், மாநாடு' ஆகிய படங்களை திட்டமிடப்பட்ட நாட்களில் சிலம்பரசன் முடித்துக் கொடுத்தார் என்பது திரையுலகினருக்கு ஆச்சரியம் கலந்த செய்தி. மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்,' படத்திலும், கன்னடத்திலிருந்து ரீமேக் ஆக உள்ள 'பத்துதல' படத்திலும் நடிக்க உள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான இடைவெளியில் தன் ரசிகர்களுக்காக ஏதோ ஒரு அப்டேட்டைக் கொடுப்பவர் சிலம்பரசன். தீவிர சிவ பக்தரான சிலம்பரசன், சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார். பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு நின்று தரிசனம் செய்யும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'நன்றி இறைவா, ஓம் நமச்சிவாயா'' என்ற வாசங்களுடன் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
எதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பதற்கான காரணம் விரைவில் தெரிய வரும்.