22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ் சினிமாவில் எங்கேயோ இருக்க வேண்டியவர் என்ற வரிகளுக்கு பொருத்தமான சொந்தக்காரர் சிலம்பரசன். சிறு வயதிலிருந்தே அவருக்கிருக்கும் திறமைகளை வைத்து அவர் எங்கேயோ உச்சத்தில் இருக்க வேண்டியவர் என்று திரையுலகில் பலரும் சொல்வார்கள்.
அடுத்தடுத்த காதல் தோல்வி, படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டார் என்ற தகவல்கள் அவருடைய சினிமா வாழ்க்கையில் தடைக்கற்களாக அமைந்தன. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு அவர் மீதான விமர்சனங்களை தகர்த்தெறிந்தது.
அடுத்து 'ஈஸ்வரன், மாநாடு' ஆகிய படங்களை திட்டமிடப்பட்ட நாட்களில் சிலம்பரசன் முடித்துக் கொடுத்தார் என்பது திரையுலகினருக்கு ஆச்சரியம் கலந்த செய்தி. மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்,' படத்திலும், கன்னடத்திலிருந்து ரீமேக் ஆக உள்ள 'பத்துதல' படத்திலும் நடிக்க உள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான இடைவெளியில் தன் ரசிகர்களுக்காக ஏதோ ஒரு அப்டேட்டைக் கொடுப்பவர் சிலம்பரசன். தீவிர சிவ பக்தரான சிலம்பரசன், சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார். பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு நின்று தரிசனம் செய்யும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'நன்றி இறைவா, ஓம் நமச்சிவாயா'' என்ற வாசங்களுடன் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
எதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பதற்கான காரணம் விரைவில் தெரிய வரும்.