வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
தமிழ், தெலுங்கு மொழிகளில் நான்கு வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். கடந்த வருடம் கொரோனா அலையின் காரணமாக வழக்கமான மாதத்திலிருந்து சில மாதங்களுக்குப் பிறகுதான் நான்காவது சீசன் நிகழ்ச்சி நடந்தது.
இந்த வருடத்திற்கான ஐந்தாவது சீசன் தெலுங்கில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். செப்டம்பர் முதல் வாரத்தின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள். இந்த சீசனையும் நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கப் போகிறார்.
தமிழில் கமல்ஹாசன் இந்த வருட 5வது சீசனைத் தொகுத்து வழங்க தேர்தலுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தமிழில் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகியதா இல்லையா என்பது குறித்து தகவல் இல்லை.
சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் தான் நிகழ்ச்சிக்கான அரங்கம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் அங்கு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி அனுமதியில்லாமல் நடத்தப்பட்டது தெரிந்ததும் அந்த ஸ்டுடியோவுக்கு அரசு தரப்பில் 'சீல்' வைத்தார்கள். மலையாள பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் ஒளிபரப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
அந்த 'சீல்' விவகாரத்தை முடித்த பிறகுதான் தமிழில் 5வது சீசன் பற்றி தகவல் வெளிவரும் என்கிறார்கள்.