37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் |

தமிழ், தெலுங்கு மொழிகளில் நான்கு வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். கடந்த வருடம் கொரோனா அலையின் காரணமாக வழக்கமான மாதத்திலிருந்து சில மாதங்களுக்குப் பிறகுதான் நான்காவது சீசன் நிகழ்ச்சி நடந்தது.
இந்த வருடத்திற்கான ஐந்தாவது சீசன் தெலுங்கில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். செப்டம்பர் முதல் வாரத்தின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள். இந்த சீசனையும் நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கப் போகிறார்.
தமிழில் கமல்ஹாசன் இந்த வருட 5வது சீசனைத் தொகுத்து வழங்க தேர்தலுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தமிழில் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகியதா இல்லையா என்பது குறித்து தகவல் இல்லை.
சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் தான் நிகழ்ச்சிக்கான அரங்கம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் அங்கு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி அனுமதியில்லாமல் நடத்தப்பட்டது தெரிந்ததும் அந்த ஸ்டுடியோவுக்கு அரசு தரப்பில் 'சீல்' வைத்தார்கள். மலையாள பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் ஒளிபரப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
அந்த 'சீல்' விவகாரத்தை முடித்த பிறகுதான் தமிழில் 5வது சீசன் பற்றி தகவல் வெளிவரும் என்கிறார்கள்.