சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடல் காட்சியும், இன்னும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு ஒரிரு நாளில் முடியவுள்ள நிலையில் மூன்றாம் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய்யை பாராட்டி 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருந்தேன். அந்த ஆசை விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் நிறைவேறியுள்ளது. நடிகர் விஜய் ஒரு திறமையான நடிகர் என்று அவருக்கு புகாழாரம் சூட்டியுள்ளார். தற்போது 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டதாகவும், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.