இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மழைப் பாடல்கள் என்பது அவ்வப்போது இடம் பெறும். குறிப்பாக கதாநாயகிகளை கிளாமராகக் காட்ட அந்த மழைப் பாடல்களைப் படமாக்குவார்கள். ஒரு காலத்தில் அப்படிப்பட்ட பாடல்கள் அடிக்கடி வருவதுண்டு, இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது. மழைப் பாடல்கள் இல்லை என்றாலும் மழை காட்சிகள் பல படங்களில் இடம் பெறத்தான் செய்கிறது.
தமிழில் 'பூமி, ஈஸ்வரன்' படங்களில் நடித்த நிதி அகர்வால் மழைப் பாடல்களில் நடிப்பது பிடிக்கவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “மழைப் பாடல்களில் நடிப்பது சுலபமானதல்ல. முழுவதுமாக நனைந்து, பின்னர் நம்மை உலர வைத்து, மீண்டும் நனைவது மிகவும் கடினமானது. மேலும், தண்ணீர் பொழியும் போது நம் கண்களைத் திறந்து கொண்டு நடிப்பது சவாலா ஒன்று. அதனால், மழைப் பாடல்களில், நடிப்பது பற்றி எண்ணம் தற்போது இல்லை,” என்கிறார்.
நிதி அகர்வால் தற்போது உதய்நிதி ஜோடியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.