சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

தெலுங்கு நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரப்போவதால் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனால் பிரச்சாரங்கள் சூடு பறந்த நிலையில் பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் என்கிற வாதம் முன் வைக்கப்பட்டதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவு குரல்களும் ஒலித்தன. இந்த நிலையில், பிரகாஷ்ராஜூம்,விஷ்ணு மஞ்சும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்துக்கு என்னென்ன நலத்திட்டங்களை செய்வோம் என்பது குறித்த வாக்குறுதிகளை அளிப்பதில் போட்டா போட்டியிலும் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது திடீரென்று அமைதியாகி விட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், இனிமேல் நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் பிரச்சாரம் மட்டுமின்றி தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாகவும் பேசுவேன் என்று கூறி வருகிறாராம். அதன்காரணமாக மற்றவர்கள் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகளுக்கும் எந்தவித பதிலும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.