எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா தற்போது அகண்டா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை போயப்பட்டி சீனு இயக்கி வருகிறார். கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோவில் நகரத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டண்ட் சிவா மேற்பார்வையில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் ரகசியாமகவே வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.. காரணம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே தனக்கு தெரியாது என பாலகிருஷ்ணா கூறியிருந்தார். இது உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடப்பது தெரிந்து விட்டால், ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்துக்கே வந்து கலாட்டா பண்ணுவார்கள் என்பதால் இந்த ரகசிய ஏற்பாடாம்.