'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா தற்போது அகண்டா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை போயப்பட்டி சீனு இயக்கி வருகிறார். கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோவில் நகரத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டண்ட் சிவா மேற்பார்வையில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் ரகசியாமகவே வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.. காரணம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே தனக்கு தெரியாது என பாலகிருஷ்ணா கூறியிருந்தார். இது உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடப்பது தெரிந்து விட்டால், ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்துக்கே வந்து கலாட்டா பண்ணுவார்கள் என்பதால் இந்த ரகசிய ஏற்பாடாம்.