2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா தற்போது அகண்டா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை போயப்பட்டி சீனு இயக்கி வருகிறார். கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோவில் நகரத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டண்ட் சிவா மேற்பார்வையில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் ரகசியாமகவே வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.. காரணம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே தனக்கு தெரியாது என பாலகிருஷ்ணா கூறியிருந்தார். இது உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடப்பது தெரிந்து விட்டால், ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்துக்கே வந்து கலாட்டா பண்ணுவார்கள் என்பதால் இந்த ரகசிய ஏற்பாடாம்.