'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் 39வது படத்தின் முதல் பார்வை படத்தின் தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. 'ஜெய் பீம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு சூர்யா நடித்து கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிட்டனர். அது போலவே, தற்போது 'ஜெய் பீம்' படத்தையும் நான்கு மொழிகளில் வெளியிட போஸ்டரை வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நேற்று தலைப்பு அறிவிக்கப்பட்ட சூர்யாவின் 40வது படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் போஸ்டரைக் கூட தமிழில் மட்டும் தான் வெளியிட்டனர். இப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்கிறார்கள்.
ஆனால், 'சூரரைப் போற்று' போல நான்கு மொழிகளில் முதல் பார்வை என்பதால், 'ஜெய் பீம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் படம் பற்றிய தகவல்களை இதுவரை படக்குழுவினர் அதிகமாக வெளியில் விடவில்லை. இன்று திடீரென வெளியிட்டுள்ளதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.




