ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை |
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து ஒரே நாளில் ஓரளவிற்குப் பேசப்பட்டால் அதற்கு தொடர்பாகவோ, தொடர்பில்லாமலோ வெவ்வேறு விஷயங்களைச் சேர்த்து கருத்துக்களையும், கமெண்ட்டுகளையும் சொல்வார்கள். அப்படி ஒன்றாக பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' படங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்து இயக்கிய 'கபாலி, காலா' படங்களைப் பற்றியும் இப்போது வம்புக்கு இழுத்துள்ளார்கள் சில ரசிகர்கள்.
“அட்டகத்தி, மெட்ராஸ்' என இரண்டு படங்களையும் கதாநாயகர்களை நம்பாமல் தனது கதையையும், இயக்கத்தையும் நம்பியதால் அந்த இரண்டு படங்களுக்காகவும் பெரும் வரவேற்பை பெற்றார் ரஞ்சித்.
அதேசமயம் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கபாலி, காலா' ஆகிய படங்களில் ரஞ்சித் அதிகம் பேசப்படவில்லை. அந்த இரண்டு படங்களும் எத்தனை கோடிகளை வேண்டுமானால் லாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், 'அட்டகத்தி, மெட்ராஸ்' படங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. அந்தப் படங்களுக்குப் பிறகு இப்போது 'சார்பட்டா பரம்பரை' படம் மூலம் மீண்டும் ரஞ்சித் பேசப்படுகிறார்.
எனவே, இனி ரஞ்சித் ஹீரோக்கள் பின்னால் போகாமல் தன் படத்திற்காக, கதைக்காக ஹீரோக்களைத் தேர்வு செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்கிறார்கள்.