'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சூரரைப்போற்று படத்திற்கு பின் பல படங்கள் நடிகர் சூர்யா கைவசம் உள்ளன. கடந்தவாரம் தான் அவர் நடிக்கும் வாடிவாசல் படத்தின் பர்ஸட் லுக் வெளியானது. நேற்று பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் 40வது பட தலைப்பான எதற்கும் துணிந்தவன் என்பதை அறிவித்தனர். இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாளில் அவரது 39வது பட தலைப்பை அறிவித்துள்ளனர். படத்திற்கு ‛ஜெய்பீம் என பெயரிட்டுள்ளனர்.
த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா வக்கீல் வேடத்தில் உள்ளார். இதை வைத்து பார்க்கும் போது அவர் வக்கீலாக நடிக்கலாம் என தெரிகிறது. அடுத்தடுத்து சூர்யா பட அப்டேட்டால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.