எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு | விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா | மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர் | பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் | பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா | சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக் | ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் |

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வழக்கு விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியிருப்பதாவது : மும்பையின் மையப்பகுதியான அந்தேரி மேற்கில் அமைந்துள்ள ராஜ் குந்த்ராவின் அலுவலகத்தில் இருந்து அதிக அளவில் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டன. அவரது அலுவலகத்தில் இருந்த அனைத்து கணினிகளும் சீலிடப்பட்டுள்ளன. ராஜ் குந்த்ரா நடத்தி வந்த ஆபாச செயலியும் முடக்கப்பட்டுள்ளது. ஆபாச படங்கள் தயாரிப்பில் கடந்த 18 மாதங்களாக ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவருடைய தொழில் சூடு பிடித்திருக்கிறது.
அவரது ஆபாச செயலில் 20 லட்சம் உறுப்பினர்கள் கட்டண உறுப்பினரகளாக இருக்கின்றனர். இதன் மூலம் ராஜ் குந்த்ரா கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். செயலியில் ஆபாச படம் பார்ப்பது இணையத்தில் பார்ப்பதைவிட எளிதாக இருந்ததால் இந்த செயலி வேகமாக பிரபலமாகி உள்ளது. ராஜ் குந்த்ரா தொடக்கம் முதலே விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து வருகிறார். தான் ஆபாச படம் எதுவும் தயாரிக்கவில்லை என்றே கூறிவருகிறார். ஆனால் அவர் மீதான வழக்குக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.