இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள சாப்பட்டா பரம்பரைத் திரைப்படம் வெளியாகியுள்ளது. 1970-களின் மத்தியில் சென்னை சென்ட்ரலை ஒட்டியப் பகுதியின் முக்கியக் கலாச்சாரமாக இருந்த குத்துச் சண்டையை மையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டிருந்தது. படம் அனைத்து தரப்பினிடையேயும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
தற்போது சார்பட்டா படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் செல்வராகவன் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். "அருமையான படம் ரஞ்சித். படத்தின் ஒவ்வோரு காட்சியையும் ரசித்தேன். மற்றும் அன்பே ஆர்யா, ஒவ்வொரு பிரேமிலும் மிளிரிக் கொண்டே செல்கிறாய். உன்னை நினைத்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டம உலகம் படத்தில் ஆர்யா நடித்திருந்தார்.
திரவுபதி இயக்குனர்
திரவுபதி இயக்குநர் மோகனின் டுவிட்டர் பதிவில், 'சார்பட்டா பரம்பரையின் மொத்த குழுவும் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். நான் கடவுள் படத்துக்குப் பிறகு ஆர்யாவின் மிகச் சிறந்த நடிப்பு. பசுபதி, ஜான் விஜய், டேன்சிங் ரோஸ் கதாபாத்திரங்கள் கவனிக்கத்தக்கவை. ரஞ்சித்தின் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் உச்சம்' என்று குறிப்பிட்டுள்ளார்.