விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் அதே கோகுலம் ஸ்டுடியோவில் தான் நடைபெற்று வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். அவர் வயதானவராக நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
சர்தார் படத்துக்காக போடப்பட்ட முதியவர் தோற்றத்தில் கார்த்தி திடீரென்று விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்கு சென்றுள்ளார். முதியவர் தோற்றத்தில் இருந்ததால், அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். இதனால் சில நிமிடங்கள் ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்த அவர், பின்னர் நடிகர் விஜய் அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். கார்த்தியின் தோற்றத்தை பார்த்த ஆச்சர்யப்பட்ட விஜய் உங்களை அடையாளமே தெரியவில்லை என்று சொன்னாராம். பின்னர் இருவரும் நலம் விசாரித்தனர். அப்போது கார்த்தியிடம் பேசிய விஜய் “உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்” என்று பாராட்டி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்த கார்த்தி, பின்னர் தனது சர்தார் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றாராம்.