அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு நாளை மறுநாள் (ஜூலை 19) விசாரணைக்கு வருகிறது.
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கவும் உத்தரவிட்டார். நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தவும் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் கூடுதலாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மஞ்சுளா அடங்கிய அமர்வில் வரும் 19ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.