நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
'அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா,' படங்களக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. தனது படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகம் வெளிப்படுத்துவதால் அவரது படங்கள் தொடர்ச்சியாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.
'காலா' படம் தவிர அவரது முந்தைய படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள். 'காலா' படத்திற்குப் பிறகு மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத்தான் ஒலிக்கும் என்பது படத்தின் டிரைலரிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பீரியட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்காக அந்த கால கட்டத்தை திரையில் கொண்டு வருவதற்காக பா.ரஞ்சித் உழைத்திருப்பது அதிகம் கவனிக்க வைக்கிறது.
வட சென்னையில் ஒரு காலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட 'பாக்சிங்' சண்டைதான் படத்தின் மையக்கரு. இந்த பாக்சிங்கை வைத்து தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றிலிருந்து 'சார்பட்டா பரம்பரை' எந்த அளவிற்கு வித்தியாசமாக இருக்கப் போகிறது என்பதுதான் கேள்வியே.
ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன், அனுபமா, சஞ்சனா நடராஜன் என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரது கதாபாத்திரங்களும், அதில் அவர்களது தோற்றங்களும் வித்தியாசமாக இருக்கின்றன.
இந்தப் படம் ஓடிடியில் வெளியாவது ஒரு குறைதான் என்றாலும் அதையும் மீறி படத்தை மக்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.