சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் | ஓடிடியில் வெளியாகும் சன்னி லியோன் படம் | ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் காரணமில்லை: சேது அபிதா திடீர் விளக்கம் | பிளாஷ்பேக்: 'உயிருள்ளவரை உஷா' கங்காவின் சோக கதை | அடுத்தடுத்து 'பயோபிக்' படங்களில் தனுஷ் | பிளாஷ்பேக்: 5 படங்களை இயக்கிய ஆடியோகிராபர் | பிரபாஸுக்கும் ஜோடி பவன் கல்யாணுக்கும் ஜோடி ; அறிமுக நடிகைக்கு ஜாக்பாட் | அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் யார் ? | 'பார்சி 2' வெப் சீரிஸ் ஆரம்பம் : இயக்குனர்கள் தகவல் | பொருளாதார சிக்கல்களை சமாளிக்க 'லியோ' பெரிய அளவில் உதவியது ; கவுதம் மேனன் |

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்தவர் சிலம்பரசன். சினிமாவைப் பற்றிய அவரது திறமைக்கு இந்நேரம் எங்கேயோ உயர்ந்திருக்க வேண்டியர் என்று திரையுலகத்திலேயே சொல்வார்கள்.
தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கே, ஏன் அவரது அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே காலையில் படப்பிடிப்பு என்றால் மாலையில் கூட வரமாட்டார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராதவர் என்று பெயரெடுத்தவர்.
கடந்த சில வருடங்களாக சிலம்பரசனிடம் பல மாற்றங்கள். மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் போது சரியான நேரத்திற்கு வந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். சிம்புவா இது என அப்போதே திரையுலகத்தினர் ஆச்சரியப்பட்டார்கள். அடுத்து கடந்த வருடம் வெளிவந்த ஈஸ்வரன் படத்திலும் குறுகிய காலத்தில் அப்படத்தை நடித்துக் கொடுத்தார்.
இப்போது மாநாடு படத்தை படக்குழுவினரே ஆச்சரியப்படும் அளவிற்கு சரியான நேரத்திற்கு வந்து முடித்துக் கொடுத்துள்ளார். “85 நாட்கள் திட்டமிட்ட படப்பிடிப்பு 68 நாட்களில் முடிந்துவிட்டது. அதற்குக் காரணம் சிலம்பரசன் கொடுத்த ஆதரவு,” என படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் பாராட்டியுள்ளார். படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் சிலம்பரசனைப் பற்றி ஒரு நாள் கூட குறை சொல்லவில்லை என்பதும் ஆச்சரியம், ஆனால், உண்மை.
மாநாடு படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.
![]() |




