திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்தவர் சிலம்பரசன். சினிமாவைப் பற்றிய அவரது திறமைக்கு இந்நேரம் எங்கேயோ உயர்ந்திருக்க வேண்டியர் என்று திரையுலகத்திலேயே சொல்வார்கள்.
தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கே, ஏன் அவரது அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே காலையில் படப்பிடிப்பு என்றால் மாலையில் கூட வரமாட்டார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராதவர் என்று பெயரெடுத்தவர்.
கடந்த சில வருடங்களாக சிலம்பரசனிடம் பல மாற்றங்கள். மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் போது சரியான நேரத்திற்கு வந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். சிம்புவா இது என அப்போதே திரையுலகத்தினர் ஆச்சரியப்பட்டார்கள். அடுத்து கடந்த வருடம் வெளிவந்த ஈஸ்வரன் படத்திலும் குறுகிய காலத்தில் அப்படத்தை நடித்துக் கொடுத்தார்.
இப்போது மாநாடு படத்தை படக்குழுவினரே ஆச்சரியப்படும் அளவிற்கு சரியான நேரத்திற்கு வந்து முடித்துக் கொடுத்துள்ளார். “85 நாட்கள் திட்டமிட்ட படப்பிடிப்பு 68 நாட்களில் முடிந்துவிட்டது. அதற்குக் காரணம் சிலம்பரசன் கொடுத்த ஆதரவு,” என படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் பாராட்டியுள்ளார். படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் சிலம்பரசனைப் பற்றி ஒரு நாள் கூட குறை சொல்லவில்லை என்பதும் ஆச்சரியம், ஆனால், உண்மை.
மாநாடு படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.
![]() |