மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் |
தெலுங்கில் உருவான 'பாகுபலி' இரண்டு பாகங்களும், இந்தியா முழுவதும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலைக் குவித்தது. அந்தப் படத்தில் நடித்த பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தார்கள். அவரது வியாபார எல்லையும் விரிவடைந்து, அவரது சம்பளமும் உயர்ந்தது.
அந்த ஆசையில் தெலுங்கில் பல நடிகர்கள் தற்போது தங்களது படங்களை பான்-இந்தியா படமாக உருவாக்கி வருகிறார்கள். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வரும் 'புஷ்பா' படத்தையும் அப்படித்தான் வெளியிட உள்ளார்கள். ஆனால், ஹிந்தியில் படத்தை வெளியிட இன்னமும் சரியான வினியோகஸ்தர் கிடைக்கவில்லையாம்.
'பாகுபலி' படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் வெளியிட்டார். அது போல தங்களது படத்திற்கும் பிரபலமான நிறுவனம் வெளியிட்டார்தான் வரவேற்பு அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கேஜிஎப் 2 படத்தை பிரபல பர்ஹான் அக்தர் நிறுவனமும், 'லிகர்' படத்தை கரண் ஜோஹர் நிறுவனமும் ஹிந்தியில் வெளியிடுகிறது. அது போல தங்களது 'புஷ்பா' படத்திற்கு பெரிய நிறுவனத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியுபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.