மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தெலுங்கில் உருவான 'பாகுபலி' இரண்டு பாகங்களும், இந்தியா முழுவதும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலைக் குவித்தது. அந்தப் படத்தில் நடித்த பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தார்கள். அவரது வியாபார எல்லையும் விரிவடைந்து, அவரது சம்பளமும் உயர்ந்தது.
அந்த ஆசையில் தெலுங்கில் பல நடிகர்கள் தற்போது தங்களது படங்களை பான்-இந்தியா படமாக உருவாக்கி வருகிறார்கள். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வரும் 'புஷ்பா' படத்தையும் அப்படித்தான் வெளியிட உள்ளார்கள். ஆனால், ஹிந்தியில் படத்தை வெளியிட இன்னமும் சரியான வினியோகஸ்தர் கிடைக்கவில்லையாம்.
'பாகுபலி' படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் வெளியிட்டார். அது போல தங்களது படத்திற்கும் பிரபலமான நிறுவனம் வெளியிட்டார்தான் வரவேற்பு அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கேஜிஎப் 2 படத்தை பிரபல பர்ஹான் அக்தர் நிறுவனமும், 'லிகர்' படத்தை கரண் ஜோஹர் நிறுவனமும் ஹிந்தியில் வெளியிடுகிறது. அது போல தங்களது 'புஷ்பா' படத்திற்கு பெரிய நிறுவனத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியுபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.