ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

நடிகர் சிலம்பரசன் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளனர். அதன் பின்னர் இந்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் பரவி வருகிறது. மிருணாள் தாகூரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க ஏற்கனவே சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் முயற்சித்தனர். அவை எதுவும் கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் சிம்பு 51வது படத்தில் மிருணாள் தாகூர் இணைகிறாரா இல்லையா என்று