மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி |

நாயை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. சிபிராஜ் நடித்து, தயாரித்த நாய்கள் ஜாக்கிரதை வெற்றி பெற்றது. தற்போது நாயை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் அன்புள்ள கில்லி.
புதுமுகம் ராமலிங்கம் ஶ்ரீநாத் எழுதி, இயக்கியுள்ளார். மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன் மற்றும் சாந்தினி தமிழரசன் , மைம் கோபி, ஆஷிக், நாஞ்சில் விஜயன், இளவரசு, பூ ராமு, இந்துமதி, ஶ்ரீரஞ்சனி மற்றும் பேபி கீர்த்திகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 
படம் பற்றிய இயக்குனர் ராமலிங்கம் ஸ்ரீநாத் கூறியதாவது: மனிதனின் உற்ற தோழனாக இருந்து வருகிறது நாய். அது சாதாரண மிருகம் மட்டுமல்ல, அது வீட்டின் பாதுகாவலன். அனைவர் வீடுகளிலும் நாய் ஒரு குடும்ப உறுப்பினராக தான் இருக்கும். அதை யாரும் பிரித்து பார்க்க மாட்டார்கள். 
உலகம் முழுக்க நாயை உறவாகவே கொண்டாடி வருகிறார்கள். நாயுடான மனிதனின் இந்த அழகிய உறவை சொல்லும் படமாக இருக்கும். நாயை வைத்து எடுக்கப்பட்ட முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கும். என்றார்.
 
           
             
           
             
           
             
           
            