டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவில் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) இயங்கி வருகிறது. இதில் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக தற்போது சண்டை இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜாக்குவார் தங்கம் இருக்கிறார்.
இந்த நிலையில் பாலசுப்ரமணியம் என்பவர் கில்டு பெயரிலேயே ஒரு சங்கம் தொடங்கி, அதன் பெயரில் வங்கி கணக்கு ஒன்றையும் தொடங்கி, கில்டு சங்கத்தின் லோகோவையும் பயன்படுத்தி, வருவதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாக்குவார் தங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜாக்குவார் தங்கம் தலைமையில் இயங்கும் சங்கமே கில்டு பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபரும் கில்டு சங்கத்தின் பெயரையும், சங்கத்தின் லோகோவையும் பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து தீர்ப்பு நகலுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜாக்குவார் தங்கம் அதில் கூறியிருப்பதாவது: எங்கள் சங்கம் தான் உண்மையான சங்கம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு சில நபர்கள் கில்டு சங்க பொறுப்பில் இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு சங்கத்திற்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் பல பொய்யான தகவல்களை பரப்பி, உறுப்பினர்களிடம் பணமோசடி செய்து ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.