'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி |

'இந்தியன் 2' வழக்கு விவகாரத்தில் ஷங்கர் வேறு படங்களை இயக்குவதற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. அதனால், சிக்கலில் இருந்து தப்பித்த இயக்குனர் ஷங்கர் உடனடியாக தனது அடுத்த படமான ராம் சரண் நடிக்க உள்ள தெலுங்குப் படத்திற்கான பேச்சு வார்த்தையை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.
படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் 50வது படமான இதை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடிக்கும் படம் என்பதால் படத்திற்கான வியாபாரமும் பெரிதாகவே இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.
படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தான் இருப்பார் என முன்னர் தகவல் வந்தது. ஆனால், தற்போது தமன் இசையமைக்கவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் தமன். அதன்பிறகு நடிப்பை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
விரைவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




