எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
'இந்தியன் 2' வழக்கு விவகாரத்தில் ஷங்கர் வேறு படங்களை இயக்குவதற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. அதனால், சிக்கலில் இருந்து தப்பித்த இயக்குனர் ஷங்கர் உடனடியாக தனது அடுத்த படமான ராம் சரண் நடிக்க உள்ள தெலுங்குப் படத்திற்கான பேச்சு வார்த்தையை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.
படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் 50வது படமான இதை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடிக்கும் படம் என்பதால் படத்திற்கான வியாபாரமும் பெரிதாகவே இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.
படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தான் இருப்பார் என முன்னர் தகவல் வந்தது. ஆனால், தற்போது தமன் இசையமைக்கவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் தமன். அதன்பிறகு நடிப்பை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
விரைவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.