கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
தனு வெட்ஸ் மனு, கிரிஷ் 3, குயின் உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் கங்கனா ரனாவத். நடிகர் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களாலும் அறியப்பட்ட நடிகையாக இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் தலைவி படத்தில் இவர் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார். இந்த படம் ஊரடங்கு காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை கதையில் கங்கனா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர சமூக வலைதளத்தில் அடிக்கடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவரது டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தோல்வி அடைந்தவர்களை மக்கள் விட்டு விடுவார்கள். அவர்களை கேவலமாகவும் நடத்துவார்கள். தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது. கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். கீழே தள்ளி விடவும் முயற்சிப்பார்கள். தனிமைப்படுத்தவும் செய்வார்கள். வெற்றி பெற்றவர்கள் தனிமையில் தான் இருக்க வேண்டும். அதனால் தான் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தனித்து இருப்பார்கள் என்று கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.