இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் அர்ஜுனை பொறுத்தவரை கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், கடந்த சில வருடங்களாக வில்லன், குணசித்திர நடிகர், இரண்டாவது ஹீரோ என புதிய பரிமாணத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி வருகிறார். பெரும்பாலும் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்ப்பதற்கு தயங்காதவர் அர்ஜுன். அந்த வகையில் சூர்யா, சரத்குமார், கமல் வரிசையில் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார் அர்ஜூன்.
விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாரிக்கவிருக்கும் சர்வைவர் என்கிற சாகச நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க இருக்கிறார் அர்ஜுன். இதற்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் துவங்குகிறது. இந்த படப்பிடிப்புக்காக அல்லது இதன் புரோமோ படப்பிடிப்புக்காக அர்ஜுன் தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க போவதாக செய்திகள் வந்தன.