சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தற்போது நடிகை அனுஷ்கா இந்த கடினமான சூழ்நிலையில் மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது, 'தயவு செய்து அனைவரையும் அன்பு செய்யுங்கள். நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுங்கள். அது எவ்வளவாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அதிகமாக அன்பு செலுத்துங்கள். அதிகமாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்களைத் தேடி மற்றவர்களை வரச் செய்யுங்கள்.
இந்த உலகத்தில் நல்லவைகளும் இருக்கின்றன என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். கொஞ்சம் கடினமாகவும் இருங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி பயப்பட தேவை இல்லை. நீங்கள் இதுவரை கடந்து வந்த கஷ்டங்களில் இருந்து புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். மேலும் புதிதாக ஆரம்பங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் நண்பர்களின் முகத்தில் முத்தமிடுங்கள். அவர்களை கட்டி அணைத்து நொறுங்கிப் போன இதயங்களை ஒன்று சேருங்கள். சத்தமாக அன்பு செய்யுங்கள். அதிகமாக நம்புங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள்.
உங்களுக்கு நீங்களே நண்பனாக இருங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் தருணங்களில் தொடர்பில் இருங்கள். உங்கள் கைகளை குலுக்கச் செய்யும் விஷயங்களுடனும் இணைந்திருங்கள். நீங்கள் இப்போது உயிரோடு இருப்பதற்கு இவ்வளவு அதிர்ஷ்டம் செய்தீர்கள் என்பதற்கு காரணமான ஒவ்வொரு விஷயங்களையும் ஆராதியுங்கள். அழகான விஷயங்கள் ஒவ்வொரு நாளும் மறைந்து கொண்டிருக்கின்றன. அவர்களில் ஒன்றாக உங்கள் இதயத்தை இருக்க விடாதீர்கள்" என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
அனுஷ்காவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.