பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் |
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தற்போது நடிகை அனுஷ்கா இந்த கடினமான சூழ்நிலையில் மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது, 'தயவு செய்து அனைவரையும் அன்பு செய்யுங்கள். நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுங்கள். அது எவ்வளவாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அதிகமாக அன்பு செலுத்துங்கள். அதிகமாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்களைத் தேடி மற்றவர்களை வரச் செய்யுங்கள்.
இந்த உலகத்தில் நல்லவைகளும் இருக்கின்றன என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். கொஞ்சம் கடினமாகவும் இருங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி பயப்பட தேவை இல்லை. நீங்கள் இதுவரை கடந்து வந்த கஷ்டங்களில் இருந்து புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். மேலும் புதிதாக ஆரம்பங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் நண்பர்களின் முகத்தில் முத்தமிடுங்கள். அவர்களை கட்டி அணைத்து நொறுங்கிப் போன இதயங்களை ஒன்று சேருங்கள். சத்தமாக அன்பு செய்யுங்கள். அதிகமாக நம்புங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள்.
உங்களுக்கு நீங்களே நண்பனாக இருங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் தருணங்களில் தொடர்பில் இருங்கள். உங்கள் கைகளை குலுக்கச் செய்யும் விஷயங்களுடனும் இணைந்திருங்கள். நீங்கள் இப்போது உயிரோடு இருப்பதற்கு இவ்வளவு அதிர்ஷ்டம் செய்தீர்கள் என்பதற்கு காரணமான ஒவ்வொரு விஷயங்களையும் ஆராதியுங்கள். அழகான விஷயங்கள் ஒவ்வொரு நாளும் மறைந்து கொண்டிருக்கின்றன. அவர்களில் ஒன்றாக உங்கள் இதயத்தை இருக்க விடாதீர்கள்" என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
அனுஷ்காவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.