மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
இந்தியத் திரையுலகத்தில் தற்போதைக்கு அதிகமான பிரம்மாண்டப் படங்களில் நடித்து வருபவர் பிரபாஸ் மட்டுமே. 'ராதேஷ்யாம், சலாயர், ஆதி புருஷ்' என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ராதேஷ்யாம்' படம்தான் முதலில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோ இரண்டாவது அலையின் தாக்கத்திற்கு முன்பாக ஏப்ரல் மாதக் கடைசியில் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அதிகமாகியுள்ளதால் படப்பிடிப்பை இன்று முதல் ஆரம்பித்துள்ளார்கள்.
நாயகன் பிரபாஸ், நாயகி பூஜா ஹெக்டே இருவரும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்களாம். இருவரும் பங்கு பெறும் சில காட்சிகளையும், எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பாடல் காட்சியையும் படமாக்குவதுடன் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. இப்படம் கடந்த நான்கு வருடங்களாகத் தயாராகி வருகிறது.
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். தமிழ் இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.